லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை: லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கபப்ட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி செல்ல வேண்டிய பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னையில் இருந்து பிராங்க் ஃபர்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் இயக்கப்படுகிறது.

ஜெர்மனியின் பிராங்க் ஃபார்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானமும், சென்னையில் இருந்து பிராங்க் ஃபார்ட் செல்லும் விமானம் தினமும் இயக்கபட்டு வருகிறது. சென்னையில் இருந்து நள்ளிரவு 12.10 மணிக்கு வர கூடிய இந்த விமானம் அதிகாலை 1.50 மணிக்கு பிராங்க் ஃபார்ட் புறப்படும். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி செல்ல கூடிய பயணிகள் 300-க்கும் மேற்பட்டோர் தினமும் இந்த விமானத்தில் பயணிப்பர்.

இந்நிலையில் லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால் பிராங்க் ஃபார்ட் நகரில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் இரு மார்க்கத்திலும் விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளதால் விமான பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

The post லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: