அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி: சென்னை இன்கம்டாக்ஸ் அணி வெற்றி

 

கரூர், பிப். 8: கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 2வது அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டியின் முதல் நாளான நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் சென்னை இன்கம்டாக்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பிஎன்ஐ மற்றும் சிஐஐ யங் இந்தியன்ஸ் ஆகியவை இணைந்து கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் பிப்ரவரி 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை அகில இந்திய பெண்கள் கூடைபந்து போட்டிகள் நடைபெறுகிறது.நேற்று மாலை 6 மணியளவில், சென்னை இன்கம்டாக்ஸ் அணிக்கும், ஐடிஎம் குவாலியர் அணிக்கும் போட்டிகள் நடைபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த முதல் போட்டியில் சென்னை இன்கம்டாக்ஸ் அணியினர் 65க்கு 50 என்ற புள்ளி கணக்கில் ஐடிஎம் குவாலியர் அணியை வென்றனர். தொடர்ந்து பல்வேறு அணிகளுக்கு போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி: சென்னை இன்கம்டாக்ஸ் அணி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: