ஓசூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பத்தாயிரம் தொண்டர்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகின்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்திருக்கிறார்கள் என்றால், அநேகமாக அவர்கள் கட்சியில் செயல்படாதவர்களாக தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான், தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும். அதிமுக தான், தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி. தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது. 2 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கத்தின் தலைமையில் தான் கூட்டணி. அதிமுக தலைமையில், கூட்டணிக்கு வரும் கட்சிகளை சேர்த்துக்கொள்வோம்,’என்றார்.
The post 80 வயது ரிடையர்டு ஆனவர்கள்தான் பாஜவுக்கு போய் இருக்காங்க… எஸ்.பி.வேலுமணி தெம்பு appeared first on Dinakaran.