சாத்தூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 

விருதுநகர், பிப்.7: சாத்தூரில் வரும் 10ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து ஸ்ரீராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில் பிப்.10ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா, அண்ணாமலை டெயோட்டா, ஐஐஎப்எம், ப்ளுஓசன், ரயல் என்பீல்டு போன்ற 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ உள்ளிட்ட கல்வித்தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நேர்காணலில் கலந்து கொள்ள வருவோர் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்று நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைதேடுவோர் https://bit.ly/3UdoeJY என்ற Google Formல் பதிவு செய்து கொள்ளலாம். முகாம் மூலம் பணி நியமனம் பெற்றால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.

The post சாத்தூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: