பிஆர்எஸ் கட்சி எம்பி காங்கிரசில் இணைந்தார்

திருமலை: தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி எம்பி காங்கிரசில் இணைந்தார். டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் பட்டி விக்ரமார்க்கா ஆகியோர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வீட்டுக்கு சென்றனர். அப்போது பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.

எம்பியுடன் மேலும் சில பிஆர்எஸ் முக்கிய தலைவர்களும் காங்கிரசில் இணைந்தனர். கடந்த 2018 சட்டபேரவை தேர்தலில் சென்னூரில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்த வெங்கடேஷ் பின்னர் பி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்து பெத்தப்பள்ளியில் எம்.பி.யாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ​​ எம்.பி., கட்சி மாறியது, பி.ஆர்.எஸ்.க்கு பின்னடைவு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

The post பிஆர்எஸ் கட்சி எம்பி காங்கிரசில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: