காஞ்சிபுரத்தில் மாயமான டிரைவர் சடலமாக மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பாண்டவ பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் ராஜி மகன் நேதாஜி (39). டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 4ம்தேதி மாலை வெளியில் செல்வதாக தன்னுடைய டூவீலரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பாமல் மாயமானதாக கூறப்படுகிறது. இதனால், நேதாஜியை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வெள்ளைகேட் அருகே சாலையோரத்தில் இறந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீசார், நேதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நேதாஜி உயிரிழந்தது எப்படி எனவிசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் மாயமான டிரைவர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: