உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் வேலு தலைமை தாங்கினார். மாவட்ட பெட்காட் சங்க செயலாளர் ஜெயராமன், உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கழிவறை வசதி, காற்று நிரப்பும் கருவி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கட்டாயம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடிப்படை வசதிகள் அமைக்கப்படாத பெட்ரோல் பங்குகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வட்ட அளவிலான மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்திற்கு எரிவாயு விநியோகஸ்தர்கள், பெட்ரோல் பங்கு பொறுப்பாளர்கள் கட்டாயம் பங்கேற்று நுகர்வோர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வழிவகை செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், எரிவாயு நுகர்வோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: