இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து 12 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்த பின், தமிழ்நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி விமான டிக்கெட்களையும் ஏற்பாடு செய்தனர். பின்பு ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் நேற்று அதிகாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, நேற்று காலை சென்னை வந்த 12 மீனவர்களையும் தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர்களது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர் appeared first on Dinakaran.