லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி

திண்டுக்கல் : லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ED அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட ED அதிகாரி அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

The post லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: