இலங்கை குடியுரிமையுள்ள தமிழர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கக் குழு :அமைச்சர் செஞ்சி மஸ்தான்

புதுக்கோட்டை : இலங்கை குடியுரிமையுள்ள தமிழர்கள் 200 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”அடுத்த கட்டமாக வந்தவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க தமிழக அரசு சட்டக் குழு அமைத்துள்ளது.தமிழகத்தில் உள்ள பிற நாட்டவர் பிரச்னையில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 106 முகாம்களில் 6 ஆயிரம் பேருக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இலங்கை குடியுரிமையுள்ள தமிழர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கக் குழு :அமைச்சர் செஞ்சி மஸ்தான் appeared first on Dinakaran.

Related Stories: