3 அமைச்சர்கள் பங்கேற்பு வடகாட்டி ஊராட்சி அரசு தொடக்க பள்ளியில் விளையாட்டு போட்டி

 

புதுக்கோட்டை, பிப்.6: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பிப்.17ம் தேதி ஆண்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இடையே ஓட்டப்பந்தயம், தவளை ஓட்டம், சாக்கு ஓட்டம், பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன.

விளையாட்டு போட்டிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர் மரிய விமலா ஜான்சி ராணி முன்னிலை வகித்தனர். பெற்றோர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆண்டு விழவில் பரிசளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

The post 3 அமைச்சர்கள் பங்கேற்பு வடகாட்டி ஊராட்சி அரசு தொடக்க பள்ளியில் விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: