கோவில்பட்டி மில் பெண் தொழிலாளி விஷம் குடித்து சாவு

திருவேங்கடம், பிப். 6:தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள வடக்கு அழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். விவசாயி. இவரது மகள் அனுராதா (18). இவர் கோவில்பட்டியில் செயல்படும் மில்லில் வேலைக்கு சென்று வந்ததை விரும்பாத அவரது தாய், உள்ளூரிலேயே தீப்பெட்டி வேலைக்கு செல்லுமாறு கூறினாராம். இதனால் மனமுடைந்த இளம்பெண் அனுராதா, நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது வயலில் தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் பதறிய அவரது குடும்பத்தினர், இளம்பெண்ணை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குருவிகுளம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவில்பட்டி மில் பெண் தொழிலாளி விஷம் குடித்து சாவு appeared first on Dinakaran.

Related Stories: