தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு

 

நாமக்கல், பிப்.4: அரசு பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கான தேசிய வருவாய் வழி திறன்தேர்வு நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 19 மையங்களில் நடைபெற்றது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்ற தேர்வை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் இருந்து, 4,775 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில், 4,607 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 168 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு அவர்கள் உயர்கல்வி பயில மாதம் ₹1000 உதவித்தொகை மத்திய அரசு வழங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: