காயாமொழியில் நாளை மறுதினம் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

உடன்குடி,பிப்.4: காயாமொழியில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுதினம் (6ம் தேதி) நடைபெற உள்ளதாக திருச்செந்தூர் மின்விநியோக கோட்டப் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்ட மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுதினம் (6ம்தேதி ) காயாமொழி பிரிவு அலுவலகத்தில் தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, இதில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் தவறாமல் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post காயாமொழியில் நாளை மறுதினம் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: