நாகப்பட்டினம்-அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் மயிலாடுதுறையில் அண்ணா நினைவு தின அமைதி பேரணி

 

மயிலாடுதுறை,பிப்.4: மயிலாடுதுறையில் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமையில் திமுகவினர் கேணிக்கரையில் உள்ள பெரியார் சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலையை வந்தடைந்தனர். அங்கு, அண்ணா சிலைக்கு திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், திமுக நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர். இப்பேரணியில் திமுக நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமான செல்வராஜ், ஒன்றிய செயலாளர் இமயநாதன், முருகமணி, நகர மன்ற துணைத் தலைவர் சிவகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது முத்து உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொன்டனர்.

The post நாகப்பட்டினம்-அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் மயிலாடுதுறையில் அண்ணா நினைவு தின அமைதி பேரணி appeared first on Dinakaran.

Related Stories: