ஜுவாலகிரி காப்புக் காடுகள் சரக பகுதியில் ஜனவரி 2024ல் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் இந்த 2 புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளது தெரிய வருகிறது. ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரகமானது, சமீபத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தையும் ஒட்டியுள்ள, தொடர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் காணப்படுவது, பன்னார் கட்டா தேசிய பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து புலிகள் இங்கு வசிக்க உகந்த வனப்பகுதியாக மாற தமிழ்நாடு அரசு வன உயிரினங்களை பாதுகாக்க எடுத்து வரும் வெற்றிகரமான நடவடிக்கைகளே காரணம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு 2 ஆண் புலிகள் நடமாட்டம்: வனத்துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.