மாணவ, மாணவிகளுக்கு சரியான அளவில் செருப்பு, ஷூ: பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நலத்திட்டமான செருப்புகள், ஷூக்களை வழங்க சரியான அளவுகளை எடுப்பதற்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புகளும், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஷூக்களும் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் அவர்களுக்கு செருப்புகள், ஷூக்களை வழங்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்த உத்தரவு: மாணவர்களுக்கு வழங்கப்படும் செருப்புகள், ஷூக்கள் அவர்கள் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் அளவெடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்தலாம். அவர்கள் மாணவர்களின் கால் அளவுகளை துல்லியமாக எடுக்க வேண்டும். அந்த விவரங்களின்படி, விலையில்லா நலத்திட்டமான செருப்புகள், ஷூக்களை உருவாக்குவதற்கு தேவையான அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The post மாணவ, மாணவிகளுக்கு சரியான அளவில் செருப்பு, ஷூ: பள்ளி கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: