அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

கோவில்பட்டி : கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உட்பட 10 பேர் மீது கோவில்பட்டி மேற்கு போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பயணியர் விடுதி முன்பு நேற்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஒட்டப்பிடாரம் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: