எங்களுக்கு இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் வாக்கு 25 சதவீதம் வரும். அதுபோக அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஓட்டுகள் என 45 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் வாங்கி தமிழகத்தில் அதிக இடத்தை பிடிப்போம். ஓ.பன்னீர்செல்வமோ மற்றவர்களோ (பாஜ) யாரும் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார். அதன்பின் மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு தான் எங்களது ஆதரவு. தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத வரை அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வெற்றி பெறுவதே எங்களது நோக்கம். மத்தியில் மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு கிடையாது. இவ்வாறு தெரிவித்தார். திண்டுக்கல் சீனிவாசனின் இந்த அதிரடி பேச்சு, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பாஜவை அழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்: திண்டுக்கல் சீனிவாசன் திடீர் சபதம் appeared first on Dinakaran.