பிப்.12ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: பிப்.12ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர், ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. சட்டப்பேரவையில் யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே உள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக காண்பிக்க வேண்டும் என்பது தான் அரசின் திட்டம் என தெரிவித்தார்.

The post பிப்.12ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: