ஓமந்தூரில், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபத்தில் அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில், இன்று காலை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் சுருதன் ஜெய் நாராயணன், சார் ஆட்சியர் தில்யான் ஷி நிகம், திமுக மாவட்ட அவைத் தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன், துணைத் தலைவர் பழனி மற்றும் ரெட்டி நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post ஓமந்தூரில், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபத்தில் அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: