இந்திய கடலோர காவல்படையின் எழுச்சி தினம்

 

சென்னை, ஜன.31: இந்திய கடலோர காவல்படையின் 48வது எழுச்சி தினத்தை முன்னிட்டு, கப்பல்களை சூரிய அஸ்தமனத்தின்போது ஒளிரச் செய்ய உள்ளனர். இந்திய கடலோர காவல்படையின் 48வது எழுச்சி தினத்தின் ஒரு பகுதியாக, கடலோர காவல்படையானது மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைக்கு அருகாமையில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களை சூரிய அஸ்தமனத்தின் போது இரண்டு தொடர்ச்சியான நாட்களில் அதாவது இன்று மற்றும் நாளை ஒளிரச் செய்யும்.

மேலும், கடற்கரைகளுக்கும் மிக அருகில் கடலில் உயிர் பிழைத்தவர்களை தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்.ஏ.ஆர்) செயல்விளக்க நிகழ்ச்சியை அரங்கேற்ற உள்ளது. வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த 6 கப்பல்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கும் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

The post இந்திய கடலோர காவல்படையின் எழுச்சி தினம் appeared first on Dinakaran.

Related Stories: