சதானந்தபுரத்தில் மகா குரு பூஜையில் அமைச்சர் பங்கேற்பு

கூடுவாஞ்சேரி, ஜன.31: சதானந்தபுரத்தில் 102ம் ஆண்டு மகா குருபூஜை விழா நடைபெற்றது. வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட சதானந்தபுரத்தில் உள்ள சதானந்தபிரம்ம குருதேவத சுவாமிகள் ஆலயத்தில் 102ம் ஆண்டு மகா குருபூஜை நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை நடந்தது.  இதில், சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி ஜோதிமணி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட திமுக சேர்மன் படப்பை ஆ.மனோகரன், தாம்பரம் மாநகராட்சி குழு தலைவர் எஸ்.சேகர், காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் எஸ்.பி பெரியய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், துணை சேர்மனுமான வி.எஸ்.ஆராமுதன் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 102ம் ஆண்டு மகா குருபூஜையை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.

இதற்கு முன்னதாக சதானந்த சுவாமிகளுக்கு சத்குரு அபிஷேகம் மற்றும் மகா குரு தீப ஆராதனை நடைபெற்றது. இதில், சதானந்த கீதம் பக்தி இன்னிசை பாடல்கள், மேள தாளங்கள் முழங்க கோலாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு, நாயன்மார் இசை நாட்டிய நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் சித்தர்கள், சிவன் பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

The post சதானந்தபுரத்தில் மகா குரு பூஜையில் அமைச்சர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: