குமாரபாளையம் அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் பழுது சரி செய்யப்பட்டு போக்குவரத்து சீரானது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் பழுது சரி செய்யப்பட்டு போக்குவரத்து சீரானது. ஆனங்கூர் ரயில்வே கேட் வயர் அறுந்ததால் ரயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. ரயில்வே கேட் பழுதால் காலை 11 மணியில் இருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சுமார் 5 மணி நேரத்துக்குப் பின் ரயில்வே கேட் பழுது சரிசெய்யப்பட்டு போக்குவரத்து சீரானது.

The post குமாரபாளையம் அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் பழுது சரி செய்யப்பட்டு போக்குவரத்து சீரானது appeared first on Dinakaran.

Related Stories: