போச்சம்பள்ளி: ஊத்தங்கரை, பர்கூர் தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், போச்சம்பள்ளியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் அண்ணாமலை, ஒன்றிய தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பாமக கொடி ஏற்றுவது, 15 இளைஞர்களை தேர்வு செய்வது, திண்ணை பிரசாரம் செய்வது, வருகிற 1ம் தேதி சென்னையில் நடைபெறும் பொது கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரங்கசாமி நன்றி கூறினார்.
The post பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.