பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விளையாட்டு போட்டி

பெரம்பலூர்: பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி விளையாட்டு தினவிழாவில், விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் விளாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு தின விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தலைவரும், மாவட்ட கலெக்டருமான கற்பகம் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளுக்கான ஜோதியை ஏற்றிவைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

The post பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: