குமரி-கேரள எல்லை அருகே பெண்ணை கட்டிப்போட்டு உயிரோடு எரித்துக் கொலை

*கொடூர மகன் கைது

திருவனந்தபுரம் : குமரி-கேரள எல்லை அருகே உள்ள வெள்ளறடையில் நேற்று காலை தாயை கட்டிப்போட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம்-கேரள மாநில எல்லையிலுள்ள வெள்ளறடை காற்றாடி பகுதியை சேர்ந்தவர் நளினி (60). இவரது மகன் மோசஸ். வேலைக்கு சரிவர செல்லாமல் மது மற்றும் போதைப் பொருளுக்கு அடிமைகியுள்ளார். மேலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மோசஸ் மீது போக்சோ உள்பட பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று காலை மோசஸ் திடீரென தனது தாயாருடன் தகராறில் ஈடுபட்டாராம். இதையடுத்து பெற்ற தாய் என்றும் பாராமல் போதையில் தாய் நளினியை வீட்டுக்குள் கட்டிப்போட்டு உயிருடன் தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் நளினி கத்தி கூச்சலிட்டார். நளினியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியினர் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் அவர் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெள்ளறடை போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று நளினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோசஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயை மகன் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குமரி-கேரள எல்லை அருகே பெண்ணை கட்டிப்போட்டு உயிரோடு எரித்துக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: