தமிழினத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் நாங்கள் கொள்கை உணர்வோடு இணைந்து நிற்கிறோம்: விசிக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதற்கு ஏற்றாற்போல் திருமாவின் தொண்டர் படை கூடியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வரும் விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். எனக்கு தோளோடு தோளாக நிற்பவர் திருமாவளவன். தமிழினத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் நாங்கள் கொள்கை உணர்வோடு இணைந்து நிற்கிறோம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம், மாநிலங்கள் என்ற நிலையே இருக்காது எனவும் பேசியுள்ளார்.

The post தமிழினத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் நாங்கள் கொள்கை உணர்வோடு இணைந்து நிற்கிறோம்: விசிக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: