திருவள்ளூர் ரயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு தீவிர சோதனை

 

திருவள்ளூர், ஜன. 26: இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையங்களில் சோதனை செய்ய மூத்த கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன், துணை ஆணையர் சின்னதுரை ஆகியோர் உத்தரவிட்டனர்.

அதன்பேரில் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் கே.பீ.செபாஸ்டின் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் க.வினாயக மூர்த்தி, கு.வெங்கடேசுலு மற்றும் ரயில்வே இருப்பு காவலர்கள் நிலையத்திற்கு வருபவர்களையும், ரயிலில் இருந்து இறங்கி வெளியே செல்பவர்களையும் சோதனை செய்தனர். இதில் ரயில்வே பாதுகாப்பு படையின் மோப்பநாய் பிரிவு துணை ஆய்வாளர் அருணாசலம் மற்றும் மோப்ப நாய் ஜூலியும் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

The post திருவள்ளூர் ரயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு தீவிர சோதனை appeared first on Dinakaran.

Related Stories: