மொழி அறிவை கல்வியோடு இணைத்ததன் காரணமாக இந்தியாவிலேயே தமிழ்நாடு| உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ் மொழியை புறக்கணித்து இந்தி மொழியை திணிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்களை கைவிட்ட பாஜக அரசுதான் கொரோனாவை விட கொடூரமானது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகே தமிழ்நாட்டில் தமிழின் ஆட்சி தொடங்கியது . பாஜகவின் திசைதிருப்பும் முயற்சி இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது. இந்துக்களின் எதிரி பாஜக என்பதை அம்பலப்படுத்துவோம். இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக தோல்வி அடையும். ராமர் கோயிலை காண்பித்து வடமாநில மக்களையும் திசை திருப்பி வருகிறது பாஜக எனவும் பேசியுள்ளார்.
The post ராமர் கோயிலை காண்பித்து வடமாநில மக்களையும் திசை திருப்பி வருகிறது பாஜக: மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.