தமிழ்நாடு அணி 70 பாயிண்ட் எடுத்து வெற்றி பெற்றது. இதுபோன்று, கோவையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டில் கூடைப்பந்து ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது. கூடைப்பந்து இறுதி போட்டியில் ராஜஸ்தான அணியை 86 – 85 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது தமிழ்நாடு அணி. எனவே, கூடைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. நேற்று நாள் முடிவில் தமிழ்நாடு 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 31 பதக்கம் பெற்று இருந்தது. நேற்றைய 6-வது நாளில் தமிழக அணிக்கு 5 தங்கம் உள்பட மேலும் 17 பதக்கம் கிடைத்தது. இன்றும் அதுபோல் பதக்கங்களை தமிழக அணி குவித்து வருகிறது. இதுதொடர்பான தகவல் விரைவில் வெளியாகும்.
The post கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி: கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிலும் தங்கம் வென்றது தமிழ்நாடு அணி appeared first on Dinakaran.