அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய மேயர்

சிவகாசி, ஜன.25: சிவகாசியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மேயர் சங்கீதாஇன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் வழங்கினர். சிவகாசியில் அம்மன்கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் பள்ளிக்கூடத்திலும், சிவகாசி இந்து நாடார்கள் பெண்கள் மேல்நிலை பள்ளியிலும் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மேயர் சங்கீதாஇன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் வழங்கினர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் ஏ.சி.சூர்யா, சேவுகன் மற்றும் கவுன்சிலர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய மேயர் appeared first on Dinakaran.

Related Stories: