உலக வில்வித்தை போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவன் தேர்வு

விளாத்திகுளம், ஜன. 25: உலக வில்வித்தை போட்டிக்கு தேர்வாகியுள்ள பள்ளி மாணவனுக்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ நிதியுதவி அளித்து வாழ்த்து தெரிவித்தார். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசுவந்தனை அருகே உள்ள கீழமங்களம் ஊராட்சி, குப்பனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, கூலி தொழிலாளி. இவரது மகன் சுகாஸ்(11), இங்குள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த டிச.6ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் முதலிடம் பிடித்து வரும் 29ம் தேதி நேபாளத்தில் நடைபெறும் உலக அளவிலான வில்வித்தை போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இத்தகவலறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, உலக வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்ற மாணவன் சுகாசை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து நிதியுதவி வழங்கினார். மேலும் நேபாளத்திற்கு சென்று வர போக்குவரத்திற்கு ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.

The post உலக வில்வித்தை போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவன் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: