பேரூராட்சி சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்

நாகர்கோவில், ஜன. 25: தமிழ்நாடு பேரூராட்சி சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் முத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி துறையில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்களின் தர ஊதியம் ரூ.1900த்தில் இருந்து ரூ.1300க்கு குறைக்கும் நடவடிக்கையை கைவிட்டு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். பேரூராட்சி துறையில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்கள் 2923 பேருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை அனைத்து பேரூராட்சி பணியாளர்களும் விடுப்பு எடுத்து வட்டார அளவில் பேரூராட்சிகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post பேரூராட்சி சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: