அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டுக்காக, 500 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது. காளைகளுக்கு மது போதை உள்ளிட்ட போதை வஸ்துகள் தரப்பட்டுள்ளதா என்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. காளைகளுக்கு காய்ச்சல், காயம் மற்றும் உயரம் சரியாக உள்ளதா என்றும் இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.