சென்னை கிழக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் 1500 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: அமைச்சர், எம்பி வழங்கினர்

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுகவினர் உட்பட 1500 பேருக்கு 16 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா பாடி குமரன்நகரில் நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரும் 88வது வார்டு மாமன்ற உறுப்பினருமான நாகவள்ளி பிரபாகரன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக டி.ஆர்.பாலு எம்பி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு, அம்பத்தூர் தெற்கு பகுதியை சேர்ந்த பகுதி, வட்ட, மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், ஆட்டோ சங்க நிர்வாகிகள், திமுகவினர் என 1500 பேருக்கு 16 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர்.

விழாவில், அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் டிஎஸ்பி ராஜகோபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.லோகேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் மோகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெ.பாலமுருகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.பூர்ணிமா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் நீலகண்டன், கவுன்சிலர் சேகர், உமா சந்தானம், பொற்கொடி கண்ணபிரான், வட்ட செயலாளர்கள் இரா.டீக்கா, சீனிவாசன், த.பிரகாஷ்குமார், த.வ.லால் மற்றும் சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள், அம்பத்தூர் தெற்கு பகுதி மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

The post சென்னை கிழக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் 1500 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: அமைச்சர், எம்பி வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: