ராமர் பெயரில் பூசை செய்யவோ அன்னதானம், பிரசாதம் வழங்கவோ தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

சென்னை: சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

The post ராமர் பெயரில் பூசை செய்யவோ அன்னதானம், பிரசாதம் வழங்கவோ தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: