முன்னதாக ரங்கா கோபுரத்திற்கு முன்பு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். இதனையடுத்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலுக்கு காரில் சென்றடைந்தார். இதனையடுத்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். பின்னர் கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் நீராடினார். இதனை தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
மேலும் அங்கு நடைபெற்ற பஜனையிலும் பங்கேற்றார். இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடி தனுஷ்கோடி சென்றார். அங்கு அரிச்சல் முனையில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் இன்று பிரதமர் மோடி தரிசனம் செய்யவுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு நேற்று பகல் 12 மணி முதல் இன்று பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி உள்ளது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post ராமேஸ்வரத்தில் இரண்டாவது நாள் பயணமாக தனுஷ்கோடியில் நடக்கும் பூஜைக்கு சென்றார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.