6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் துறை ஆணையராக இருந்த எல்.சுப்பிரமணியன் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராகவும், மாற்று திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெய முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராகவும், நில நிர்வாகத்துறை ஆணையர் எஸ்.நாகராஜன் மாற்று திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மீன்வளத்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராகவும், இதேபோல், சமூக நலத்துறை முதன்மை செயலாளராக இருந்த ஜடாக் சிரு மீன்வளத்துறை ஆணையராகவும், தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக இருந்த செல்வராஜ், சாலை வழி திட்டம் 2-ன் திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: