வடகொரியாவின் நீருக்கடியிலான அணு ஆயுத சோதனை: வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக தகவல்

வடகொரியா: நீருக்கடியிலான அணு ஆயுத சோதனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. சமீபத்தில் தென்கொரியாவின் ஆளுமையின் கீழ் உள்ள இரண்டு தீவுகளின் சமீபத்தில் வடகொரியா ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது கோரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்தது இதனை அடுத்து கொரிய தீபகற்பம் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் படைகளுடன் தென் கொரிய ராணுவம் கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் நீருக்கடியிலான அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டில் அதிகார பூர்வ இணையதளமான கே.சி.என்.ஏவில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ஆழ்கடல் அணுகுண்டு தாக்குதல் அமைப்பை வடகொரியா ராணுவம் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வடகொரியாவின் நீருக்கடியிலான அணு ஆயுத சோதனை: வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: