இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் பெருந்தொகையான ரூ.1 லட்சம் அபராதத்தை செலுத்துவதற்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “ஒருவரை பற்றி கருத்து தெரிவிக்கும்போது, அது ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்து, அபராத தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்கி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மனு மீதான விசாரணை பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
The post ஒருவரை பற்றி கருத்து தெரிவிக்கும்போது, அது ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் : நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் அறிவுரை! appeared first on Dinakaran.