மோசமான வானிலை ஜனாதிபதி முர்மு விமானம் 4 மணி நேரம் தாமதம்

ஷில்லாங்: ஜனாதிபதி திரவுபதி முர்மு மேகாலயா மற்றும் அசாம் மாநிலங்களுக்கு 3 நாள் பயணம் சென்றுள்ளார். 3ம் நாளான நேற்று அசாம் சென்று அங்கு கர்பி ஆங்லாங் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் முர்மு கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்று காலை 10 மணிக்கு அவர் அசாம் புறப்பட திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் மேகாலயாவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அவரது விமானம் சிக்கி கொண்டது. 4 மணி நேர தாமதத்துக்கு பிறகு மதியம் 2.35 மணிக்கு திரவுபதி முர்மு அசாம் புறப்பட்டு சென்றார்.

The post மோசமான வானிலை ஜனாதிபதி முர்மு விமானம் 4 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: