தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 20 நிமிட போராட்டத்துக்கு பின் எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது. மகர சங்கராந்தியை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. மின்சார பெட்டியில் ஏற்பட்ட கோளாறால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்து ஏற்பட்ட அறையில் மெத்தைகள் இருந்ததால் அதன் மூலம் மற்ற இடங்களுக்கும் தீ பரவியதாக தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
The post பரேலில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தீ விபத்து appeared first on Dinakaran.