கிருத்திகா வந்து பார்த்த போது தொட்டிலில் இருந்த குழந்தையை காணவில்லை. இதுகுறித்து கணவரை எழுப்பி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தையை தேடினர். அப்போது வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை கிடந்தது. இதையடுத்து மோகன்ராஜ் உடனடியாக குழந்தையை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து மோகன்ராஜ், கிருத்திகாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கொன்றதை கிருத்திகா ஒப்புகொண்டார். போலீசாரிடம் கிருத்திகா அளித்த வாக்குமூலம்: மோகன்ராஜ் முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார். இந்நிலையில் எங்களுக்கு குழந்தை பிறந்ததால் முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றதால் நான் சிறைக்கு செல்ல நேரிடும் என்று மோகன்ராஜ் என்னிடம் கூறினார். இதையடுத்து குழந்தையை கொன்றுவிடுவது என்று முடிவு செய்தோம். அதன்படி மோகன்ராஜ் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று என்னிடம் கொடுத்தார். நான் மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையை போட்டேன். பின்னர் குழந்தையை யாரோ கொன்றுவிட்டதாக கூறி நாடகமாடினோம். இவ்வாறு கிருத்திகா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
The post ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் பிறந்த பச்சிளம் குழந்தை கொலை: நாடகமாடிய இளம்பெண், வாலிபர் கைது appeared first on Dinakaran.