அவர்கள் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காசிமேடு பகுதியில் சோதனை நடத்தியபோது, சிங்காரவேலன்நகர் சுரங்க பாலம் அருகே பைக்கில் வந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்ததுடன் அவரிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் 5 கிலோ கஞ்சா, ஒரு பட்டா கத்தி இருந்தது.
அவர் எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த அஜித்குமார் (27) என்பதும் காசிமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வேலுவின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது. சைதாப்பேட்டை சிறையில் உள்ள வேலு மூலம் கஞ்சாவை வாங்கி வந்து காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமாரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, எடை போடும் மிஷின், பட்டாக்கத்தி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா விற்ற ரவுடி கைது: பட்டாக் கத்தி, பைக் பறிமுதல்: வடசென்னையில் பரபரப்பு appeared first on Dinakaran.