சிறுமிகளை கடத்த முயன்றதாக மே.வங்கத்தில் துறவிகள் மீது தாக்குதல்: 12 பேர் கைது


புருலியா: மேற்குவங்கத்தின் கங்காசாகரில் மகர சக்ராந்தி திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள உத்தரபிரதேசத்தை சேர்ந்த 3 துறவிகள் வாகனத்தில் வந்துள்ளனர். மேற்குவங்கத்தின் புருலியா மாவட்டம் காஷிபூர் பகுதியில் சென்றபோது தொடர்ந்து செல்ல வழிதெரியாமல் அங்கிருந்த சிறுமிகளிடம் வழி கேட்டுள்ளனர். துறவிகளின் மொழி புரியாததால் பயந்து போன சிறுமிகள் கூச்சலிட்டு ஓடியுள்ளனர்.

இதையடுத்து அங்கு திரண்ட மக்கள் துறவிகள் சிறுமிகளை கடத்த முயற்சி செய்ததாக கூறி அவர்கள் மீதும், வாகனத்தின் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் துறவிகளை மீட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 12 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சிறுமிகளை கடத்த முயன்றதாக மே.வங்கத்தில் துறவிகள் மீது தாக்குதல்: 12 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: