10ம் தேதி தங்கம் விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையானது. நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் பொங்கலை ஒட்டி தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ. 46,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்து ரூ. 5,845-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.78.00க்கும் ஒரு கிலோ ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post பொங்கல் பண்டிகையை ஒட்டி உயர்ந்தது தங்கம் விலை : ஒரு சவரன் ரூ.200 அதிகரித்து ரூ. 46,760-க்கு விற்பனை!! appeared first on Dinakaran.