பாடாலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 

பாடாலூர்,ஜன12:புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாடாலூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆலத்தூர் வட்டத் தலைவர் அசோக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள மாநில முன்னுரிமை அரசாணையை உடனடியாக நீக்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post பாடாலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: