முதல் இரட்டையர்கள்

கோலாலம்பூரில் நடைபெறும் மலேசியா ஓபன் பேட்மின்டன் ேபாட்டியில் நேற்று 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன் மகளிர், ஆடவர் ஒற்றையர் பிரிவுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர். அதே நேரத்தில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்/சிராக் இணை 39நிமிடங்களில் பிரான்சின் லூகாஸ் கார்வீ, ரோனன் லாபர் இணையை 21-11, 21-18 நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப் பெற்றனர்.

இந்த வெற்றி மூலம் சர்வதேச பேட்மின்டன் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய இரட்டையர்களாக சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோர் சாதித்தனர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ இணையும் 21-19, 13-21, 21-15 என்ற செட்களில் ஜப்பானின் மாயூ மட்சுமோடோ, வாக்னா நகஹரா இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

The post முதல் இரட்டையர்கள் appeared first on Dinakaran.

Related Stories: