சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்திலும் தேர்வுகள் தொடர்பான தகவல்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சியின் ‘‘X” கணக்கிலும் அதிகாரப்பூர்வ தேர்வுகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான இடங்களை தேர்வு மூலம் நியமித்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கு முன்பு(டுவிட்டர்) ‘‘TNPSC_Office” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேர்வாணையம் வெளியிடப்படும் தேர்வு தொடர்பான தகவல்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கிலும் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் ேகாபால சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

The post சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்திலும் தேர்வுகள் தொடர்பான தகவல்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: